
அடைகாக்கும்
காகிதக் கோழி !
புரட்டப் புரட்டப்
புதையல் திறக்கும்
சுரபி !
ஆறாம் அறிவுக்குத்
தீனி சுரக்கும்
அஃறினை !
நூல்
ஞான மூலதனத்தால்
நடத்தப்படுகிற
"வரிகள் " நிறைந்த
வணிகம்
இந்த வணிகத்தில்
இலக்கிய தரமிருந்தால்
நட்டக்கணக்கு மட்டுமே
நடப்பு நிதி நிலவரம் !
(எனது நிழல்மடி நூலிலிருந்து)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக