
பிரசவ காலப்
புன்னகை !
கிளைகளில் குவிந்த
வான வில்லின்
வசீகரம் !
மகரந்தக் கூடத்தில்
தேன் தயாரிக்கும்
மலர்த் தொழிற்சாலை !
ஈக்களை எதிர்பார்த்துப்
பரிமாறப்பட்ட
பந்தி!
அழகுக்கெல்லாம் ஆயுள்
அற்பம் என்பதை
உணர்த்தும் உன்னதம் !
விஷச்செடியானாலும்
விளைகிறது இங்கே
சுவைத்தேன் !
வாழ்வுக்கும் சாவுக்கும்
வேறுபாடில்லாத
விற்பனை!
(எனது "பூட்டுகள்" நூலிலிருந்து )
1 கருத்து:
சொல்லனுமுன்னு நெனச்சா சொல்லிபுடனும்.
கவிதை நல்லாயிருக்கு.
கருத்துரையிடுக