
சிங்கப்பூரிலும் சாதி!
விரதமிருந்து வென்றுவருகிறேன் -என்
விடலைப்பருவ சபலநாட்களை இந்த
வெள்ளித்தீவிலும்.....
ஆடையைச் சுமையாய் என்னும்
அழகிகளைச் சாலையில்
அடிக்கடி கடக்கும்போதும்...
பெரிய திரையிலும்
சின்னத்திரையிலும்
கட்டிலறையில் கணினித்திரையிலும்
ஆபாசங்கள் திரை விரிக்கும்போதும்...
இன்னும் எத்தனையோ
வண்ண வண்ண வசீகரங்கள்
சபலநரம்புகளுக்கு
சாப்பாடு போடக்
கூப்பிடும்போதும்
விரதமிருந்து
வென்று காட்டவும்
காத்திருக்கும் காதலிக்காக
கற்பைப் பாதுகாத்துவைக்கவும்
காரணமாயிருக்கிற
அந்த மந்திரம்,
“மேலைக்கலாசாரத்தில்
விழுந்துவிடாமல்
சிங்கப்பூரிலும் சாதி” என்று தந்தை
சொல்லியனுப்பிய சேதிதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக