29 அக்டோபர், 2009

நூல்

அறிவை
அடைகாக்கும்
காகிதக் கோழி !

புரட்டப் புரட்டப்
புதையல் திறக்கும்
சுரபி !

ஆறாம் அறிவுக்குத்
தீனி சுரக்கும்
அஃறினை !

நூல்
ஞான மூலதனத்தால்
நடத்தப்படுகிற
"வரிகள் " நிறைந்த
வணிகம்
இந்த வணிகத்தில்
இலக்கிய தரமிருந்தால்
நட்டக்கணக்கு மட்டுமே
நடப்பு நிதி நிலவரம் !

(எனது நிழல்மடி நூலிலிருந்து)