10 பிப்ரவரி, 2011

வாயில்லா ஜீவன்

திரையரங்க நெரிசலில்
திடீரெனப் புகுந்த பசு
கணக்கற்றோரைக் குத்திக்
காயப்படுத்தியதாகச் செய்தி...

பாவம் என்ன செய்யும்
பசுதானே அது...
பேச மட்டும் தெரிந்திருந்தால்
வன்முறையில் இறங்காமல்
வாய் திறந்திருக்கும் இப்படி...

“எத்தனைதான் மடியை நான்
ஏறக்கட்டிக் கொண்டாலும்
சொட்டுகூடக் கன்றுக்கின்றி
ஒட்டக்கறந்து விடுகிறீர்கள்... சரி
என்பிள்ளைக்குத்தான்
எட்டவில்லை
எவர் பிள்ளைக்காவதுகூட
பசியைப் போக்கப்
பயன்படுத்தாமல்
பாவிகளே இப்படி
“கட் அவுட்” படத்தின் மேல்
கவிழ்க்கிறீர்களே”- என்று
வாய் பேசத்தெரிந்திருந்தால்
வன்முறை செய்திருக்காதுதான்...

பாவம் என்ன செய்யும்
பசுதானே அது!

1 கருத்து:

மதுரை சரவணன் சொன்னது…

arumai... vaalththukkal