குறள் வெண்பா
நெடிய மனக்கவலை,நீடித்த சோகம்
வடியக் கவிதை வடி.
சிந்தியல் வெண்பா
தெள்ளுதமிழ்ச் சொத்தெமக்கு; சிந்தனைக்கு நல்லறிவை
அள்ளியள்ளி ஊட்டும் அமுதமழை- வெள்ளமது
வள்ளுவமோர் முப்பால் மது.
நேரிசை வெண்பா
மாமியார் வீடின்றி வாழ்வை அனுபவிக்க
சாமியார் வாழ்வே சரியென்று-தாமிருந்த
மோனத் தவநிலையில் மோகத்தீ மூளவிட்டோர்
காணவேண்டும் வெஞ்சிறையில் காப்பு.
இன்னிசை வெண்பா
ஈழத்தின் ஏக்கம் இதயமெலாம் சூழ்ந்திருக்க
வாழத் தலைப்பட்ட வள்ளியம்மைத் தாய்போன்றோர்
நீர்வழியும் கண்களொடு நீர்வழியும் வான்வழியும்
பார்முழுதும் வேர்விட்டார் பார்.
21 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக