23 ஜூன், 2010

பூக்கள்

பூமித் தாவரங்களின்
பிரசவ காலப்
புன்னகை !

கிளைகளில் குவிந்த
வான வில்லின்
வசீகரம் !

மகரந்தக் கூடத்தில்
தேன் தயாரிக்கும்
மலர்த் தொழிற்சாலை !

ஈக்களை எதிர்பார்த்துப்
பரிமாறப்பட்ட
பந்தி!

அழகுக்கெல்லாம் ஆயுள்
அற்பம் என்பதை
உணர்த்தும் உன்னதம் !

விஷச்செடியானாலும்
விளைகிறது இங்கே
சுவைத்தேன் !

வாழ்வுக்கும் சாவுக்கும்
வேறுபாடில்லாத
விற்பனை!

(எனது "பூட்டுகள்" நூலிலிருந்து )

1 கருத்து:

அன்புடன் நான் சொன்னது…

சொல்லனுமுன்னு நெனச்சா சொல்லிபுடனும்.

கவிதை நல்லாயிருக்கு.