19 ஜூன், 2010

செடிகள்


மரங்களின் வீர்யத்தை
நிச்சயிக்கும்
இயற்கை எக்ஸ்ரே !

பூமித்தாயின் முகத்தில்
முளைத்த பச்சைப் பருக்கள் !

மண்கோழி அடைகாத்த
விதை முட்டையை
உடைத்துக்
கிளர்ந்தெழுந்த
தாவரக் குஞ்சு !

மரங்கள்
மரபுக் கவிதையென்றால்
செடிக்கவிதை ஓர் ஹைக்கு !

பூமித்தாயை விட்டு
உயரே வளர
ஆசைப்படாத
அம்மா பிள்ளைகள் !

(எனது "பூட்டுகள்" கவிதை நூலிலிருந்து )

கருத்துகள் இல்லை: