22 ஆகஸ்ட், 2009

பொரு"ளாதாரம்"

உணர்ச்சிப் பெருக்கால்
கொந்தளித்துவிட்டார் -பாரத
உள்துறை அமைச்சர் !
*
அமெரிக்க அரசிடம்
புகார் செய்யப் போவதாகவும்
அறிவித்திருக்கிறார் ...
*
இத்தனை பெரிய பதவிலிருப்பவரை
இரத்தம் கொதிக்கவைத்த அந்த
ஆத்திர சம்பவம் எது ?
*
படிக்கவும் பிழைக்கவும் போன
பலப்பல தேசங்களில்
உதைபடுகிற இந்தியர்கள் பற்றிய
உணர்ச்சிக் கொந்தளிப்பா ?
*
எரிவாயுவும் எண்ணெய்விலையும்
ஏறி ஏறியே இந்திய மக்களை
நசுக்குகிறதே என்ற வேதனைக்கு
உலகளாவிய தீர்வு காணும்
உந்துதலா ?
*
முள்வேலிக் கமிபிக்கிடையே
முடங்கிக் கிடக்கிற
மூன்று லச்சம் தமிழர்களின்
எதிர்காலம் பற்றிய
எழுந்த ஆத்திரமா ?
*
பொறுங்கள் இந்திய நாட்டுப்
பொதுமக்களே ...பொறுங்கள் ...
*
உலகின் மிகப் பெரிய
ஜனநாயக நாட்டின்
உள்துறை அமைச்சரை
உணர்ச்சி வசப்பட வைத்த
சம்பவம் எது தெரியுமா ?
*
அமெரிக்க விமான நிலைய
அதிகாரிகள்
சோதனை என்ற பெயரில்
இரண்டு மணி நேரம்
காத்திருக்க வைத்துவிட்டார்களாம்
நடிகர் ஷாருக்கானை ...
*
அமெரிக்க அரசிடம்
புகார் செய்ய
அமைச்சருக்குதான் எத்தனை
அவசியமான பிரச்சனை என்று
எண்ணி எண்ணியே
இறுமாந்து போகின்றன
இந்திய இதயங்கள் ...
*
பாரத மாதா கீ ஜே!
பாலிவுட் பிதாவுக்கு ... ம்ம்..ஜே !!

6 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நாம் அனைவருக்கும் நெஞ்சினுள் முள்ளாகத் தைத்துக் கொண்டிருப்பதை ஆதங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்!

சத்ரியன் சொன்னது…

இதைத்தான் தேசியா ஒற்றுமை என்று உளறுதுகளோ சிலதுகள்?

கோபமாக இருக்கிறது கவிதை வரிகள்.

(இருக்காதா பின்னே?...பெயரில் "யார்" இருப்பதால்).

ந‌.வீ.விசய‌ பாரதி சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஜோதி.

ந‌.வீ.விசய‌ பாரதி சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றி திரு சத்ரியன்.

Guru சொன்னது…

உங்களின் மொழி நடை மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது.

ஆனால் உங்களின் கருத்து எனக்கு சரியானதாக தோன்றவில்லை,

பல இந்தியர்களாள் நேசிக்கப்படும், பிரபலமான ஒரு இந்தியன், ஆசிய நாட்டுக்காரன் என்பதாலும், ஒரு இஸ்லாமிய சமூகத்தவன் என்பதாலும் இரண்டு மணி நேரம் சேதனை செய்தது வேதனையானதே. இதற்காக இந்திய தனது எதிர்ப்பை பதிவு செய்தே ஆக வேண்டும். அதைத்தான் S.M.கிருட்ணா செய்துள்ளார்.

ந‌.வீ.விசய‌ பாரதி சொன்னது…

உங்களின் க‌ருத்துக்கும்...வருகக்கும் நன்றி குரு.